Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்த அறிவிப்பு!

 


கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தடைப்பட்டிருந்த பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சுக்கள் அனுமதி வழங்கியுள்ளன.


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

சுகாதார தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு அமைச்சுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த காலகட்டத்தில் முன்னெடுக்க கூடிய விளையாட்டு போட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விளையாட்டு போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments