Home » » பாடசாலை ஆரம்பிக்கும் திகதி குறித்து சற்றுமுன் வெளியான செய்தி

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி குறித்து சற்றுமுன் வெளியான செய்தி


பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ள மேலதிக விடுமுறை காலம் மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரிசில் பரீட்சைகளை நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை மற்றும் வெலிக்கந்தை கல்வி வலயத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையும் ஒக்ஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட ஒருவார கால விடுமுறைக்கு அமைய நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |