Advertisement

Responsive Advertisement

ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் போடப்படவுள்ள பலத்த இராணுவப் பாதுகாப்பு!

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் முழுமையான இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் அதே நாள் இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை. ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments