Advertisement

Responsive Advertisement

புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றிணைந்த பொது பிரச்சாரக் கூட்டம் திங்கட்கிழமை(27) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சி வேட்பாளர் மா.உதயகுமார் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

இப் பிரச்சார நிகழ்வில் கூட்டமைப்பின் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம்,  கோ.கருணாகரம், மா.உதயகுமார், மு.ஞானப்பிரகாசம்,  இரா.சாணக்கியன், ந.கமலதாசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா,

வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மாநகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments