Home » » உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை இன்று சனிக்கிழமை (11) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்

உயித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் சி.ஜ.டியினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் புலத்தினியின் சிறிய தந்தையரான செல்வராசா தேவகுமார் என்பவர் ஸாரான் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் இன்று சனிக்கிழமை அவரை அவரது வீட்டில்வைத்து கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்;குதலில் கட்டுவாப்பிட்டி தேவாலயம் மீது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது கஸ்தூனின் மனைவியான ஸாரா என்றழைக்கப்படும் புலத்தினி; உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட சடலத்தில் மேற்கொண்ட டி.என்.ஏ. மரபணு பரிசோதனையில் பொருந்தவில்லை என்ற நிலையில் அவர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுவந்துள்;ள நிலையில் அவரது சிறிய தந்தையார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |