அரச ஊழியர்களிடம் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை இம்மாதம் முதல் மீள அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த அறவீடுகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை இம்மாதம் முதல் மீள அறவிட தீர்மானிக்கப்பட்டது.
அது தொடர்பான சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
0 Comments