Home » » ஸ்ரீலங்காவின் அரச இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதலின் பின்னணி என்ன? பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவின் அரச இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதலின் பின்னணி என்ன? பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள தகவல்

z
ஸ்ரீலங்கா கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்த காரணமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ஸ்ரீலங்காவில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நாட்டில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக கணினி அவசர தயார்நிலை குழு காணப்படுகின்றது. அத்துடன் விமானப்படையினரின் கணினிப் பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவை இரண்டும் இணைந்தே செயலாற்றுகின்றன.
இந்நிலையில் சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஸ்ரீலங்கா கணினி அவசர தயார்நிலை குழு வழங்கியுள்ளது.
பெரும்பாலான அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் இதனை பின்பற்றியுள்ளன. எனினும் ஒரு சிலர் அதனைப் பின்பற்றவில்லை.
உரிய நேரத்தில் முறையான அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாக நாங்கள் பார்க்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |