Home » » காத்தான்குடியில் இன்று ஆறு பேர் கைது !!

காத்தான்குடியில் இன்று ஆறு பேர் கைது !!

ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்த இருவருமாக மூவரை காத்தாதன்குடி பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (23.06.2020) காலை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஹெரோயினுடன் கைதான இருவரும் சகோதரர்களாவர்.

இதேவேளை குற்றச் செயல்களுடன் தேடப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதோடு,காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |