Home » » வாழைச்சேனை காகித ஆலை மீளமைக்கப்படுகிறது

வாழைச்சேனை காகித ஆலை மீளமைக்கப்படுகிறது



அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்து  ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் நாட்டின் தேசிய வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் கடற்படையினர் வழங்குவதாக தெரிவித்தார்.

கடற்படையின் மின் மற்றும் மின்னியல் பொறியியல் துறை' பிரிவினர் குறித்த தொழிற்சாலையில் உள்ள பல்வேறு பிரதான இயந்திரங்களை இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைய மீளமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |