Home » » மீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்! வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்! !!

மீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்! வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்! !!

எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமானது திங்கட்கிழமை காலை 4 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுகிறது.
இந்நிலையில், ஜுன் 1ம் திகதி திங்கட் கிழமை முதல் வழமை போன்று ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.
பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதாவது 3ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலுக்குவரும் ஊரடங்குச் சட்டமானது 4ஆம், 5ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |