Home » » மட்டக்களப்பில் உழவு இயந்திரம் மோதியதில் ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் மோதியதில் ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மீது உழவு இயந்திரம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் திருகோணமலை இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஊடகவியலாளர் மிதுன் என்றழைக்கப்படும் ஈ.மிதுன்சங்கர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் அவரது மூன்று நண்பர்கள் என நால்வர் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனைக்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |