Home » » பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்தல் தொடர்பில் வெளியான செய்தி!!

பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்தல் தொடர்பில் வெளியான செய்தி!!

2021ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாக்காளர் பதிவு தகவல்களைப் பெற மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் செயலகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

“கல்வி அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, முதலாம் தரத்தில் மாணவர்கள் சேருவதற்கு தேர்தல் பதிவேட்டில் ஐந்தாண்டு பதிவு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவிட் -19 தொற்று நோய் காரணமாக, மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தேர்தல் பதிவேடுகள் குறித்த தகவல்களை வெளியிடாது.

அதன்படி, தேர்தல் பதிவேடுகள் குறித்த தகவல்களை அப்பகுதியின் கிராம அலுவலகர் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx என்ற முகவரியில் உள்நுழைந்து தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாக்காளர் பதிவு தகவல்களைப் பெற முடியும்” என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |