ஸ்ரீலங்காவில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளது.
குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 07 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 674 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 20 பேர் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 313 ஆக உயர்வடைந்துள்ள நிலையில்,
கொரோனா தொற்று உறுதியாகியவர்களில் 444 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments