Advertisement

Responsive Advertisement

புலியைத் தொடந்து பூனைகளையும் விட்டுவைக்காத கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் திவரமாக முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது.

இதில் கொரோனா வைரசுகளை செறிவூட்டி அவற்றை நாய், பூனை, கோழி, வாத்து, பன்றி ஆகிய உயிரினங்களுக்கு ஊசி மூலம் செலுத்தி சோதனை செய்தது.
சில நாட்கள் கழித்து அந்த விலங்குகளை பரிசோதனை செய்தபோது பூனைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மனிதர்களுக்கு மட்டுமன்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் பூனையிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான ஆராய்ச்சி நடத்தி வருவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments