இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களிடமும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரத்தில் பேனை அல்லது பென்சில் போன்ற எழுதுகருவிகளை எடுத்து எழுதுமாறு கோரப்பட்டுள்ளது.
“விடுமுறையில் எழுதும் நாடு... பெறுமதியான புத்தகம்” என்ற தொனிபொருளுக்கு அமைய கல்வியமைச்சரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் சுப நேரம் இன்று இரவு 10.43இற்கு உதயமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்திலேயே நாட்டுக்கு பெறுமதியானதும், பயன்மிக்கதுமான விடயங்களை எழுதுமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: