Home » » இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

புதிய இணைப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக உயர்வடைந்துள்ளது.
சற்று முன்னர் மேலும் நான்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் அடிபப்டையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.
பிந்திய இணைப்பு
இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் இன்று மாலை ஐந்து மணி வரையான இலங்கையின் நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
  • உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை - 649
  • சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 506
  • தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் - 136
  • இறப்புகள் - 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |