Home » » ஸ்ரீலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஸ்ரீலங்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா : அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஸ்ரீலங்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ சி ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் குறித்த பரிசோதனையை விரிவு படுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளாந்தம் 1000 பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இன்று அடையாளம் காணப்பட்ட ஐவரில் நால்வர் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |