யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்கியுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தந்தை மற்றும் 11 வயது, 7 வயது மகள்களாவர்.இதில் ஐவர் ஆண்களாவர். 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.
அரியாலை மதபோதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டநிலையில் இன்று இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments: