Home » » நேற்று திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

நேற்று திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்கள் என புதிதாக எவரும் சமூகத்திலிருந்து கண்டறியப்படவில்லையென இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு தகவல் வழங்கும்போது,
கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்கள் என புதிதாக எவரும் சமூகத்திலிருந்து கண்டறியப்படவில்லை. இது நல்லதொரு அறிகுறி.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களே தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டனர். நேற்றும் அப்படியே. பேருவளையில் சில கிராமங்கள் மூடப்பட்டுள்ளன. வைரஸ் பரவுதலை நாங்கள் தடுத்துள்ளோம். அதேசமயம் மன்னார் தாராபுரம் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் பலர் இங்கு வர கோரிக்கை விடுக்கின்றனர்.ஒரேயடியாக அவர்களை அழைத்தால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யோசிக்க வேண்டும். எனவே எப்படியும் அரசு அவர்களை அழைத்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க இராணுவம் முழு அளவில் உதவுகிறது. என்றார்.
x
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |