Home » » மிருசுவில் படுகொலைதாரிக்கு மன்னிப்பளித்த கோட்டாபய -எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

மிருசுவில் படுகொலைதாரிக்கு மன்னிப்பளித்த கோட்டாபய -எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலைதாரியான இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தமைக்கு எதிராக, கொலைசெய்யப்பட்ட குடும்பத்தினர் சார்பாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை ரத்து செய்யுமாறும் தெரிவித்தே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை இலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக இன்று தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 19 ஆம் திகதி ஞானச்சந்திரன், சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் (வயது 7) ஆகிய எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |