Home » » இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!


கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக சமூகம் பிராந்திய மற்றும் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு இலங்கையில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட்ட 17 முஸ்லிம் அமைப்புக்கள் அறிக்கை ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றாது போனால் அது ஒவ்வொரு முஸ்லிமும் தமது கடமைகளில் இருந்து விலகியராக கருதப்படுவார் என்பதை குறிப்பதாக அமையும் என்று அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரியுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |