Home » » கல்முனை வலயத்தில் கடமையாற்றிய கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் இலங்கநாதன் ஓய்வு பெறுகின்றார்

கல்முனை வலயத்தில் கடமையாற்றிய கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் இலங்கநாதன் ஓய்வு பெறுகின்றார்


(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை வலய கணித பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் சீனித்தம்பி இலங்கநாதன் இன்றுடன் (25-சனிக்கிழமை) தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுகிறார்.

காரைதீவைச்சேர்ந்த திரு.இலங்கநாதன் கல்விச்சேவையில் 32வருடகால சேவையினை பூர்த்தி செய்தவராவார். கல்முனை நற்பிட்டிமுனையில் பட்டதாரி ஆசிரியையான திருமதி விஜயலக்ஸ்மியை கரம்பிடித்த அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

பேராதனைப்பல்கலைக்கழக பௌதீகவிஞ்ஞானத்துறைப்பட்டதாரியான இவர் 1988முதல் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மருதமுனை சம்ஸ் மத்தியகல்லூரி காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 2012வரை விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றினார்.

பின்னர் கல்முனை கல்வி வலயத்தில் கணித பாட ஆசிரிய ஆலோசகராக 2012 இல் நியமனம் பெற்று, 2017முதல் கணித பாட உதவிக்கல்விப்பணிப்பாளராக  ஓய்வு பெறுகிறார்.  ஓய்வுபெறும் வரை கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினார். இவர் கல்வித்துறையில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்துறையிலும் அதிக ஆர்வம் கொண்டவராவார்.

இவரது சேவைக்காலத்தில் கல்முனை வலயம் கணிதபாடத்தில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியைக்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று கணிதபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் இலங்கநாதன் ஓய்வு பெறுகின்றார்

Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |