Home » » கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார உத்தியோகத்தர்

கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார உத்தியோகத்தர்


கொழும்பு மாநகர சபையின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிசோதனை இதை உறுதிப்படுத்தியது என கொழும்பு நகராட்சி மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
டாக்டர் ருவன் விஜயமுனி கூறுகையில்,
கொழும்பு நகராட்சி மன்றப் பகுதியில் இந்த உத்தியோகத்தருடன் பணிக்குச் சென்ற இதர பணியாளர்கள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன.
மேலும் கொரோனா களப்பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதார ஊழியர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
மாக்கொலையை வதிவிடமாக கொண்ட இந்த உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |