கொரோனா ஒழிப்பிலும் இனவாதக் கருத்துக்களைத் தூண்டித் தான் செயல்பட வேண்டுமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், சில அமைச்சர்களின் கருத்துக்கள் இனவாதத்தோடு பேசப்படுவதாக அமைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எமது இணையத்தளத்திற்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தின் போது அவர்கள் ஏழு நாட்கள் ஊரடங்குச் சட்டத்தினை பிறப்பித்து, ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
அவர்களின் சுகாதார செயல்பாடுகளும், யுத்த செயல்பாடுகளும் சிறப்பாக தான் இருந்தன. இன்றைய சூழ்நிலையும் அதனைப் போல கையாளப்பட வேண்டும்.
இது தொடர்பில் மேலும் அவர் வழங்கிய முழுமையான கருத்துக்கள்,
0 comments: