Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுகாதார வழிமுறைகளை மீறுவோர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் சுகாதார வழிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய நபர்களை கைது செய்வதற்கு இன்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் 9650 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

0 Comments