இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஐந்தாவது இலங்கையர் தொடர்பில் அவரது நண்பர்கள் சோகமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
44 வயதான குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து கொரோனா தொற்றியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிசசை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது நண்பர்கள், உயிரிழந்தவருக்கு அனுதாபம் தெரிவித்து பேஸ்புக்கில் பல பதிவுகளை பதிவிட்டிருந்தனர்.
அந்த பதிவுகளுக்கயை, 4 வருடங்களுக்கு முன்னர் இத்தாலி சென்ற குறித்த நபர் அண்மையில் நாடு திரும்பியுள்ளார். 4 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியும் அவரால் தனது மனைவி மற்றும் மகளை பார்க்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் தனது குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்ட ஒருவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
உயிரிழப்பதற்கு முன்னர் ஒரு முறையேனும் அவரால் தனது மனைவி, மகள் மற்றும் தாயை பார்க்க முடியாமல் போனமை குறித்து அவரது நண்பர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய மதியநேர செய்திகள்
0 comments: