ஒரு கொரோனா தொற்றாளரிடம் இருந்து நாளொன்றுக்கு 10 பேருக்கு இந்த தொற்று பரவலாம் என பொரெல்ல மருத்து ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஜெயருவண் பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் தற்போது வரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 3 நாட்களில் 100 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு நோயாளியிடமிருந்து அடுத்துள்ள பத்துப் பேருக்கு ஒரே நாளில் பரவும் என பொரெல்ல மருத்து ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஜெயருவண் பண்டார தெரிவித்திருக்கிறார்.
இச்சூழ்நிலையில் பொது மக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடித்தால் தொற்றுவதிலிருந்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: