Home » » ஊரடங்கு வேளையில் வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்!

ஊரடங்கு வேளையில் வீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்!

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த வியாபாரிகள் உட்பட 3 பேரை நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்ததுடன் 54 கிராம் ஹெரோயினை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு நிந்தவூர் 4 ம் பிரிவு கடற்கரை வீதியில் உள்ள வீட்டை பொலிஸ் நிலைய பெருங் குற்றத்தடுப்பு பிரிவு பெறுப்பதிகாரி வை.விஜயராஜா தலைமையிலான பொலிசார் இராணுவத்தின் உதவியுடன் சுற்றிவளைத்தனர்.
இதன் போது ஹெரோயினை விற்பதற்காக பொதி செய்து கொண்டிருந்த போது ஹெரோயின் வியாபாரி உட்பட 3 பேரை கைது செய்ததுடன் 54 கிராம் ஹெரோயினை மீட்னர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் 34, 34, 23, வயதுடையவர்கள் எனவும் இவர்களை 3 நாள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |