Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம்

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார்.

எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்ட போதே பேராசிரியர் இதனை தெரிவித்துள்ளதுடன், அவர் கொவிட் 19 வைரசுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் வைத்தியர்கள் புதிய கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மூலம் பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments