Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெண் ஒருவரால் முழுமையாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசம்

குருணாகல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவு பிரதேசத்தில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் கணவர் சிப்பாயாக செயற்படுகின்ற நிலையில் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பெண் பிரதேசத்தின் பலருடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கணவர் ஊடாக அவருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட போதிலும் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்றியதாக இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
விடுமுறைக்கு வந்த கணவருடன் இந்த பெண் பிரதேசத்தின் பல வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்றமையினால் குறித்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தட்டுள்ளது.


Post a Comment

0 Comments