மேல் மாகாணத்தில் பணியாற்றிய நிலையில் ஊரடங்கின் பின்னர் நிர்க்கதியானவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை மேல்மாகாண ஆளுநர் ரொஸான் குணதிலக்க அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒரு இடத்தில் இருந்து மற்றும் ஒரு இடத்துக்கு செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல்மாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் நிர்க்கதியாக உள்ளவர்கள் தமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ள இலக்கங்களை அறிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்- 011-2441147, 0113456162, 113456163, 0113456164, 0113456165, 0113456166, 0113456167, 0113456168, 0113456169, 0113456170, 0113456171.
0 comments: