Home » » ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் !!!

ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் !!!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அதிகரித்தாலும் அதற்கு இணையாக நாள்தோறும் கொரோனாவிலிருந்து பரிபூர்ணமாக குணமடைந்தும் வெளியேறிச்செல்வதையும் அவதானிக்க கூடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே நாட்டில் தொடர்ந்தும் சில பிரதேசங்களில் ஊரடங்கு அமுலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |