Home » » நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றைய தினம் பதிவான 63 தொற்றாளர்களில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் நேற்று மட்டும் கொரோனா தொற்றிற்குள்ளான 63 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்பேடி நேற்றைய தினமே அதிகூடிய கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுடையவர்கள் அதிகரித்துவரும் நிலையில் நேற்றைய அதிகரிப்பு குறித்து சுகாதார மருத்துவத்துறை வட்டாரங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் பதிவான 63 தொற்றாளர்களில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |