ஜப்பானில் இன்று அதிகாலை 5:30மணி அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்தாக USGS தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஐப்பான், நகரான மியாகியில் இருந்து 50 கிலோ மீற்றருக்கும் குறைவான இடத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் பசிபிக் கடற்பரப்பிற்கும் அடியில் 41.7 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
ஐப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக கணக்கிட்டுள்ளது. மேலும், அதிகாலை 5:30 மணிக்கு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது,
0 comments: