கொட்டகலை ரொசிட்டா நகரப் பகுதியிலுள்ள மதுபானசாலை ஒன்று, இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று, திம்புள்ள பத்தனை பொலிஸில், இன்று (10) முறையிடப்பட்டுள்ளது.
மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்ட அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்ட அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: