ஸ்ரீலங்காவில் தற்போதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 50 பேர் பூரண குணமடைந்த வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனவரி மாதம் நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இதுவரை இலங்கையில் மொத்தமாக 190 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டில் 21 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தினமும் 10 அல்லது அதற்கும் குறைவான புதிய கொரோனா தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் மாத்திரம் புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
0 comments: