Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா அச்சம்! கொழும்பில் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமையினைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் 73 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதுடன், 104 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments