Home » » ஸ்ரீலங்காவில் மரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா

ஸ்ரீலங்காவில் மரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா

புத்தளம் - அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமி குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |