உலகம் முழுவதும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ள கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று இரவு 7.30 மணிவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 126 ஆக காணப்பட்டது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24 லட்சத்து 28 ஆயிரத்து 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் நான்கில் ஒரு வீத மரணங்கள் அமெரிக்காவிலேயே ஏற்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு வீதம் அமெரிக்காவிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 613 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 40 ஆயிரத்து 620 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 67 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 16 ஆயிரத்து 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
உலகில் கொரோனா நோயாளிகள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட ஸ்பெய்னில் இதுவரை அந்த நோய் காரணமாக 20 ஆயிரத்து 852 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு இரண்டு லம்சத்து 210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் இத்தாலியில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 972 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 23 ஆயிரத்து 660 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 894 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 19 ஆயிரத்து 718 பேர் இறந்துள்ளனர்.
ஜேர்மனியல் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 743 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 4 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 comments: