Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள தகவல்! ஸ்ரீலங்காவில் மேலும் உயர்ந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய ஸ்ரீலங்காவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தொடர்ந்தும் பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார அமைச்சுக் கேட்டுக் கொண்டுள்ளது.
பொது மக்களின் சுகாதாரத் தன்மையுடனான செயல்பாடுகளினால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் அந்த அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments