Home » » மட்டக்களப்பில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

மட்டக்களப்பில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு விஷேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உதவி, முதியோர் கொடுப்பனவு மற்றும் வலது குறைந்தோர் கொடுப்பனவு பெறத் தகுதியான காத்திருப்போர் பட்டியலிலுள்ள 35ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இவ்வாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அரச அதிபர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்… 

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய கடந்த வாரம் சமுர்த்தி உதவி பெறுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், புற்றுநோய், சிறுநீரக நோய் போன்ற விசேட நோய்க் கொடுப்பனவுகள் பெற்றுவந்த அனைவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதனால் தொழிலை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள சுமார் 17 ஆயிரம் குடும்பங்களுக்கும் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அடுத்த வாரத்தில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சதோச நிறுவனத்தினூடாக மானிய விலையில் பருப்பு, ரின்மீன், சீனி, பெரியவெங்காயம், கடலை போன்ற அத்தியவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இப்பொருட்கள் வறிய மக்களைச் சென்றடையும் வகையில் அரச உதவி 5 ஆயிரம் ரூபாவினைப் வழங்கும் இடங்களில் இரண்டு வாரங்களுக்குத் தேவையான சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அரசினால் வழங்கப்படும் உதவிகளை விட அரச சார்பற்ற நிறுவணங்கள், தனிநபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியர் சங்கம் உட்பட வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலம் ஊடாக, பிரதேச செயலகங்கள் மூலம் சுமார் 41 ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதெனவும், கிடைக்கப்பெற்ற ஒவ்வொன்றும் ஆயிரத்தி முன்னூறு ரூபா பெறுமதியான பொதிகள் எனவும் இவை பிரதேச செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் பொருத்தமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் செயற்படுத்தி வருகின்ற மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |