Home » » கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையிலும் அரசின் உத்தரவை மதிக்காத 14,268 பேர்!

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையிலும் அரசின் உத்தரவை மதிக்காத 14,268 பேர்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் ஸ்ரீலங்காவிலும் அதன் தாக்கம் அதிகரித்துவருகின்றது.
உலகளவில் 65000 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
200 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறுகின்றன.
இந்நிலையில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 14,268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 3,563 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |