இத்தாலியில் நேற்றைய தினம் (23) மட்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 601 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில் இத்தாலியில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சீனா கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தாலும் இத்தாலியில் தினமும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் இத்தாலியில் நேற்றைய தினமான திங்கட்கிழமை (22) 601 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6077 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (22) 651 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: