Home » » அமெரிக்காவில் முதன்முறையாக மனிதனுக்கு பரீட்சிக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி

அமெரிக்காவில் முதன்முறையாக மனிதனுக்கு பரீட்சிக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி


கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அமெரிக்காவில் முதன்முறையான மனிதனுக்கு பரீட்சிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வோசிங்டனில் உள்ள ஆராச்சி நிலையம் ஒன்றில் நால்வருக்கு இந்த தடுப்பூசி பரீட்சிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தடுப்பூசி நோய்களுக்கான வைரஸ்களில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு பிரதிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்குமா? என்பதை கண்டறிய இன்னும் சில மாதங்கள் செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முதல் தடுப்பூசி 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது வெற்றிப்பெறுமானால் சாதாரண பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு 18 மாதங்களாவது செல்லும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது அவசரமாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி என்று குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் வைரஸின் பரவல் வேகத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |