Home » » வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோருக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியோருக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொற்று நோய் பரிசோதனைக்குட்படாமல் தம்மைப் பதிவு செய்யாமல் இருப்போர் தொற்று நோய்த் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து சோதனைக்குட்படாது இருப்பவர்கள் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் நிச்சயமாக 14 நாட்கள் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |