மறு அறிவித்தல் வரும் வரையில், புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 முதல் மறுஅறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
0 comments: