கொரோனா வைரஸ் காரணமாக 10 மருத்துவர்கள் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் நவீன் டி சொய்சா வெளியிட்டுள்ளார்.
இவர்களில் மருத்துவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களுக்கு அந்த வைரஸ் தொற்றியதுடன் சிலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: