Home » » பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் தமிழ் இளைஞர்கள்!!

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் தமிழ் இளைஞர்கள்!!



த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதான அழைப்பு சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது.
பிரித்தானியாவின் New Molden, Kentan போன்ற இடங்களில் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் சுமந்திரன் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென்று சென்றிருந்த இளைஞர்களை கோபப்பட வைத்திருந்தது.
இன்றைய அரசியல் சூழ்நிலைகள் பற்றிய தெளிவைக் கேட்டறிந்துகொள்வதற்காக தாம் அங்கு சென்றிருந்த போதும், சுமந்திரன் மக்களைச் சந்திக்க வராதது தமக்கு கவலை அளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
சுமந்திரன் தொடர்பான தமது கருத்துக்களை, நிகழ்வு நடைபெற இருப்பதாகக்கூறப்பட்டிருந்த கட்டிடத்தில் அவர்கள் எழுதிவிட்டும் சென்றிருந்தார்கள்.
இந்த சந்திப்புத் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் லன்டன்கிளையிடம் கேட்டபொழுது, இந்தச் சந்திப்பு தமது கிளையினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட இருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக தமது கோபத்தை தமிழ் இளைஞர்கள் வெளிப்படுத்திய வீடியோ இது:



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |