Home » » சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் களைகட்டிய இலங்கை திருநாட்டின் 72 வது சுதந்திரதின நிகழ்வுகள்

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் களைகட்டிய இலங்கை திருநாட்டின் 72 வது சுதந்திரதின நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இலங்கை திருநாட்டின் 72 வது சுதந்திரதினத்தையொட்டி சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
சாய்ந்தமருதின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம்  தலைவர் ஏ.எம்.எம்.றிபாஸ் தலைமையிலும் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையிலும் , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையிலும் , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.மதனி தலைமையிலும் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலில்  நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையிலும் ,

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையிலும் , சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் தலைமையிலும் , இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் அதன் பொறுப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையிலும் , சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில்  அதிபர் எம்.எம்.சம்சுதீன் தலைமையிலும் , மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையிலும்  தேசியக் கொடியேற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஞாபகார்த்த மரம் நடும் நிகழ்வுகளும் ,  சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும் ஆப் பெரிய பள்ளிவாசலில்  ஜனாதிபதிக்கும் , முப்படையினருக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் சிறந்த நல்வாழ்வுக்காக வேண்டி விசேட துவாப் பிரார்த்தனையும்  வீதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மிகவும் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |