Home » » இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது பெண் தொடர்பில் தற்போது வெளியான செய்தி

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது பெண் தொடர்பில் தற்போது வெளியான செய்தி

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட சீன பெண்ணுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்குவதற்கு தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதுவரை அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவரின் உடல் நிலை தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் அவருக்கு சிகிச்சையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஐ.டி.எச். மருத்துமனையில் 5 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |